தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பராமரிப்பு பணி காரணமாக மன்னவனூர் சூழல் பூங்கா இன்று முதல் 4 நாள் மூடல்

கொடைக்கானல் : கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா, பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் வரும் 4ம் தேதி வரை மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானதாகவும், சுற்றுலாப்பயணிகள் விரும்பி பார்வையிடும் இடமாக மன்னவனூர் சூழல் சுற்றுலா பூங்கா உள்ளது.

கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இந்த சூழல் சுற்றுலா பூங்கா மன்னவனூர் ஏரியுடன் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி இப்பகுதிக்கு செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் ஜிப் ரோப் என்ற சாகச விளையாட்டும் உள்ளது.

மன்னவனூர் ஏரியில் சுற்றுலா பயணிகள் பரிசல் மற்றும் குதிரை சவாரி செய்வதற்கான வசதிகள் உள்ளன. இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனாவின் உத்தரவுப்படி இந்த பூங்கா இன்று (ஏப்.1) முதல் 4ம் தேதி வரை மூடப்படுகிறது. எனவே இந்நாட்களில் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related News