தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒலிம்பிக் ட்ரிபிள் ஜம்பில் பங்கேற்கும் மன்னார்குடி விவசாயி மகன்

மன்னார்குடி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2 நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தடகளம், பாய்​மர படகு, துப்​பாக்​கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உட்பட இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தடகளம் ட்ரிபிள் ஜம்ப் (மும்முனை தாண்டுதல்) பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளம்வீரர் பிரவீன் சித்ரவேல்(22) தகுதி பெற்றுள்ளார்.
Advertisement

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரவீன் சித்ரவேல். இவர் சிறு வயது முதலே தடகளத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2018ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த ஜூனியர் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் வெண்கல பதக்கத்தை பிரவீன் சித்ரவேல் வென்றார். 2023ம் ஆண்டு கஜகஸ்தானில் நடந்த போட்டியில் வெள்ளி பதக்கம், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் தற்போது நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். இவரது தேசிய சாதனை 17.37 மீட்டர் தூரமாகும். கடந்த ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 17.50 மீட்டர் தூரமே சாதனையாக இருந்து வருகிறது. இதனால் பிரவீன் சித்ரவேல் பதக்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Related News