தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!

Advertisement

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கஞ்சா போதையில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த வடிவேலு என்ற நபர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை போதை ஆசாமி அடித்து நொறுக்கினார்.

மேலும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அருகில் இருந்த நபர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வடிவேலு ஏற்கனவே பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போதை ஆசாமிக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

Advertisement