தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழப்பு!

மணிப்பூர்: மணிப்பூரில் குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. சூர்சந்த்பூர் மாவட்டம் கான்ஃபி என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழந்தனர்.

Advertisement

சூர்சந்த்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் மேற்கில் அமைந்துள்ள கான்ஃபி கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில தடை செய்யப்பட்ட குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

அப்போது குக்கி தேசிய ராணுவ போராளிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் யுனைடெட் குகி நேஷனல் ஆர்மி (UKNA) என்ற ஆயுதக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச் சண்டைக்கு இடையே பல தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல குக்கி மற்றும் ஜோமி தீவிரவாத குழுக்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த பட்டியலில் UKNA பெயர் சேர்க்கப்படவில்லை.

துப்பாக்கிசூடு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற தீவிரவாதிகளைத் தேடும் பணி அந்தப் பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதல் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகளை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.

Advertisement

Related News