தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணிப்பூரில் 300 துப்பாக்கிகள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் கூட்டாக சோதனை நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், காக்சிங் மற்றும் தவுபால் ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மணிப்பூர் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவம் நேற்று முன்தினம் இரவில் இருந்து அந்த பகுதிகளில் கூட்டாக சோதனை நடத்தினர். இதில்,300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.