தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செப். 12ல் பிரதமர் மோடி பயணம்?: ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல்

 

Advertisement

புதுடெல்லி: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி முதன்முறையாக வரும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி-சோ சமூகத்தினரிடையே மூண்ட இனக்கலவரம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 221க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 50,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், அங்கு கடந்த 2025 பிப்ரவரி மாதம் 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 5ம் தேதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமரின் இந்த நீண்டகால மவுனம் குறித்து எதிர்க்கட்சிகளும், உள்ளூர் மக்களும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் (செப்டம்பர் 12 - 14) மணிப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தின்போது, தலைநகர் இம்பால் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறார்.

மேலும், மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை அறிவித்து, பல புதிய முயற்சிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களிலும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Related News