தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக செய்திக்கு 3 நாட்களுக்கு பின் பிரேன் சிங் மறுப்பு

இம்பால்: தான் பதவியை ராஜினாமா செய்ததாக வந்த தகவல்கள் ஆதாரமற்றது என்று மணிப்பூர் பாஜ முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீ மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3 ம் தேதி கலவரம் வெடித்தது. கலவரம் ஓராண்டுக்கும் மேலாகி இன்றளவும் கனன்று கொண்டிருக்கிறது. மணிப்பூர் வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
Advertisement

இந்த நிலையில்,கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பிரேன் சிங் விரைவில் ராஜினாமா செய்வார் என்று 3 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வந்த செய்தியை முதல்வர் பிரேன் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் மணிப்பூர் உள்ளது.

இது போன்ற முக்கியமான நேரங்களில் மணிப்பூர் தலைவர்கள் பலவீனமாக இருக்க முடியாது. எங்கள் திறனில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். நான் ராஜினாமா செய்ய போவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி. இது எங்களுடைய அரசியல் எதிரிகளின் வேலையாகும். மணிப்பூரின் நிலைமை குறித்து பிரதமர் அலுவலகத்தை அரசு தினமும் தொடர்பு கொண்டு வருகிறது. எனவே,ராஜினாமா போன்ற பொய் செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement