தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே, கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி பகுதியில் சிலை கடத்தல் நடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் செல்லம்பட்டி பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் அவர், உசிலம்பட்டியை சேர்ந்த காசிமாயன் (43) என்பதும், டூவீலரில் அவர் கொண்டு வந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தபோது, ஒரு அடி உயரம், 3 கிலோ எடையுள்ள மாணிக்கவாசகர் உலோக சிலை இருந்ததும் தெரிய வந்தது. மேலும், விசாரணையில், காசிமாயன், தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் சேர்ந்து, உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி கோயிலில் மாணிக்கவாசகர் சிலையை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

மேலும், பாப்பாபட்டியை சேர்ந்த தவசி (65) என்பவருடன் சேர்ந்து சிலையை விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சிலையை பறிமுதல் செய்த போலீசார் காசிமாயன், தவசி ஆகியோரை கைது செய்தனர். சிலை திருட்டு தொடர்பாக சோலை, வேல்முருகன், மதன் மற்றும் சிலையை வாங்க வந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News