தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

 

Advertisement

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, கத்தரிப்புலம் புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3,500 ஏக்கரில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு, நீலம் என 10க்கும் மேற்பட்ட வகை மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படும் சுமார் 5,000 டன் மாம்பழங்கள் கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு சீசன் காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சரியான விலை கிடைக்கவில்லை.

தற்போது மழை காலத்தில் காய்க்கும் கார் காய் என அழைக்கப்படும் விளைச்சல் நன்றாக உள்ளது. மரங்களில் ருமேனியா, ஒட்டு நீலம் அதிகளவில் காய்த்து உள்ளது. ருமேனியா கிலோ ரூ.55க்கும், ஒட்டு நீலம் ரூ.15 முதல் ரூ.35 வரையும் விலை போகிறது. கேரளாவுக்கு ருமேனியா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் மரங்களில் இலை மற்றும் மாங்காய்களில் கருப்பு பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. வேதாரண்யம் தோட்டகலைத்துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மா மரங்களை பார்வையிட்டனர். பின்னர் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

Advertisement

Related News