தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக் ஜலசந்தியில் சூறைக்காற்றின் வேகம் குறைந்தது: மண்டபம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

மண்டபம்: பாக் ஜலசந்தி பகுதியில், ஆழ்கடலில் சூறைக்காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, மண்டபம் பகுதியிலிருந்து இன்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் வாரத்தில் சுழற்சி முறையில் 3 நாட்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாக் ஜலசந்தி ஆழ்கடல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இது காற்றழுத்தமாகவோ, புயலாகவோ மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. அதன் பேரில் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

மேலும், பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. இதனால் மண்டபம் மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தடை விதித்தனர். அதன்பேரில் மீனவர்கள் படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு காற்றின் வேகம் தணிந்ததை அடுத்து, இன்று காலை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி சாதனங்களை சேகரித்துக் கொண்டு 2 நாட்களுக்குப் பின் இன்று கடலுக்கு சென்றனர்.

Advertisement

Related News