தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மண்டபம் கடலோர பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் சுக்கு பறிமுதல்

மண்டபம்: மண்டபம் அருகே கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு மூட்டைகளை போலீசார் நேற்று இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் அருகே வேதாளை தென்கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாளை கடற்கரை பகுதியில் போலீசார் நேற்று இரவு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டத்தில், உணவுக்கு பயன்படுத்தப்படும் சுக்கு ஏராளமான மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. அதிலிருந்த ஒரு டன் சுக்குவை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து, கடலோர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் தொடர்புடையோர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News