தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காங். பெண் எம்பியிடம் நகை பறித்தவன் கைது; டெல்லி போலீஸ் அதிரடி

 

புதுடெல்லி: டெல்லியில் நடைப்பயிற்சியின்போது தமிழக பெண் எம்பி சுதாவிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற குற்றவாளியை, காவல்துறை கைது செய்து நகையை மீட்டெடுத்தது. தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா, கடந்த 4ம் தேதி டெல்லியின் மிக உயரிய பாதுகாப்புப் பகுதியான சாணக்யபுரியில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். போலந்து தூதரகம் அருகே அவர் வந்தபோது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சுதாவின் கழுத்தில் இருந்த நான்கு சவரனுக்கும் கூடுதலான நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

இந்தத் துணிகர சம்பவத்தில் சுதாவின் ஆடைகள் கிழிந்ததோடு, கழுத்தில் இலேசான காயங்களும் ஏற்பட்டன. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையிலும், டெல்லி காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, கண்காணிப்புக் கேமரா பதிவுகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் உதவியுடன் துரிதமாகச் செயல்பட்ட டெல்லி காவல்துறை, இன்று குற்றவாளியைக் கைது செய்தது. அத்துடன், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகையையும் மீட்டது.

 

Related News