தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டிற்குள் புகுந்து துணை நடிகை, தாயாரை செருப்பால் அடித்தவர் கைது: பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை

 

Advertisement

சென்னை: வீட்டிற்குள் புகுந்து துணை நடிகை மற்றும் அவரது தாயாரை செருப்பால் அடித்தவரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் பாக்கியலஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (25). இவர் கோப்ரா, டிமான்டி காலனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது தாயார் ஜா (50). இந்நிலையில், இவரது வீட்டிற்கு மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜேம்ஸ் (42) என்பவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்த ஜாவிடம் முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை செருப்பால் அடித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மதுரவாயல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜேம்சை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜேம்ஸ் மளிகை கடை நடத்தி வந்ததாகவும் அப்போது கொடுக்கல் வாங்கல் தகராறில் துணை நடிகையின் தாயார் ஜேம்சை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 வருடம் கழித்து அதனை பழிவாங்கும் விதமாக வீட்டிற்கு சென்று ஜேம்ஸ் திரும்பவும் செருப்பால் அடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, துணை நடிகையின் தாயாரை செருப்பால் அடித்த புகாரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Advertisement