தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக நிர்வாகி: சந்தேக மரணம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட மூவர் கைது

 

திருச்சி: மணப்பாறையில் பாஜக நிர்வாகி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பாஜக நகர தலைவர், செயலாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பாஜக நகர துணை செயலராக பதவி வகித்த பாண்டியன், தனது கடையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பாண்டியனின் மனைவி ஞானசௌந்தரி அளித்த புகாரில் தனது கணவர் கொலையில் சந்தேக இருப்பதாக தெரிவித்தார்.

தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை தொடர்பாக பாஜக நகர் தலைவர் கோபாலகிருஷ்ணன், பாஜக நகர செயலாளர் சண்முக சுந்தரம், விஜயராகவன் மற்றும் உயிரிழந்த பாண்டியன் ஆகியோர் புகார் அளித்ததாகவும், பாண்டியனை மற்ற மூவரும் குற்றாலம் அழைத்து சென்றதாகவும், அப்போது பாண்டியன் பதற்றத்தோடும், மன உளைச்சலோடும் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் குற்றாலத்தில் இருந்து தொலைபேசியில் பேசும் போதும் தான் வருவேனா மாட்டேனா என தெரியவில்லை கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மணப்பாறை திரும்பிய பாண்டியன் கடந்த 23ம் தேதி கடைக்கு சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். ஞானசௌந்தரி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோபாலகிருஷ்ணன், சண்முக சுந்தரம் மற்றும் விஜயராகவனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மூவரும் இணைந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது அம்பலமானது. இது வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பாண்டியனை மிரட்டியதும், பாண்டியன் சதேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Related News