தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாறையில் கொட்டி தீர்த்த கனமழையால் வணிகம் பாதிப்பு

*வியாபாரிகள் வேதனை

Advertisement

மணப்பாறை : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று நாள் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் வணிகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் அடைந்தனர்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மணப்பாறையில் பருவ மழையால் பெரும் மழை பொழிவு இல்லை என்ற போதிலும், அவ்வப்போது தொடர்ந்து பெய்யும் சிறு சிறு மழைகள் விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது.

இருப்பினும் அவை வணிகர்களுக்கு வியாபார ரீதியாக பெரும் பாதிப்பையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மழை என்றாலே தேநீரும் பலகாரமும், சுடச்சுட உணவுகளும் விற்று தீர்ந்துவிடும் என்றும் எண்ணிய வியாபாரிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்து, போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடியது.

இதன் காரணமாக டீக்கடை முதல் சிறு சிற்றுண்டிகள், பெரிய உணவகங்கள் வரை அனைத்து கடைகளிலும் உணவுப்பொருட்கள் தேக்கம் அடைந்து வியாபாரத்தில் பெறும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இவை மட்டுமின்றி பழச்சாறு கடைகள், பழங்கள் - காய்கறி விற்பனை, இறைச்சிக் கடைகள், ஆடைகள், ஜவுளிக்கடை, பூஜை பொருட்கள் விற்பனை எனத் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வணிகம் வரை எந்த நிறுவனத்திலும் பெரும் அளவில் வியாபாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தொடர்மழை ஏற்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்து வரும் நிலையில், அதே நேரம் சிறு சிறு தொடர் மழைகளால் வியாபாரமும் நஷ்டம் அடைந்து வருவதாக வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement