தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மானாமதுரை சிப்காட்- சிவகங்கை பைபாஸ் ரோடு இணைப்புச்சாலை தார்ச்சாலையாகுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் பைபாஸ்ரோட்டை இணைக்கும் வகையில் இணைப்புச்சாலை உள்ளது.

இந்த சாலை மூலம் சிவகங்கை, மதுரை பகுதிகளில் இருந்து நகருக்குள் வருவோர் சிப்காட், மானாமதுரை டவுனுக்கு எளிதாக செல்ல முடியும்.

அதே போல மதுரை சிவகங்கை செல்வோருக்கு இந்த இணைப்புச்சாலை வசதியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலை வழியாக செல்வோர் குண்டும் குழியுமாக சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பெரியசாமிராஜா கூறுகையில், ‘‘இந்த சாலை கங்கையம்மன் நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன்நகர், நேதாஜிநகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் வசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

மேலும் கொன்னக்குளம், மணக்குளம், குலையனூர், தம்பிக்கிழான் சிங்ககுருந்தங்குளம், நவத்தாவு, சன்னதிபுதுக்குளம் செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ள இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.