தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலி உர தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவா?.. மூச்சு திணறலால் மக்கள் பீதி

 

Advertisement

 

திருவொற்றியூர்: மணலியில் உள்ள எம்எப்எல் உர தொழிற்சாலை அருகே சென்ற மக்களுக்கு அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பீதி அடைந்த மக்கள் போலீசார் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எப்எல் உர தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து விவசாயத்திற்கு பயன்படும் உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எம்எப்எல் தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் வாகனத்தில் சென்ற பொதுமக்களுக்கு அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தில் கர்ச்சிப்பை கட்டி மூடிக்கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.

மேலும் டி.பி.பி சாலை, மணலி சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கும் மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டதால் அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் மணலி போலீசார் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். எம்எப்எல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா மூலப்பொருள் புகை போக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால், அமோனியா வாயு காற்றில் பரவி தொழிற்சாலை அருகே சென்ற பொதுமக்களுக்கு மூச்சு திணறல் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மழை காலங்களில் அமோனியா வாயு காற்றில் பரவும் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும் மாசுகட்டுப்பாடு வாரியம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News