தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலி 16வது வார்டில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு

 

Advertisement

திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 16வது வார்டு சடையன்குப்பம், பர்மாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருதோடு பிளாட்டுகளாக மாற்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்துவருவதாக மணலி மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதன் அடிப்படையில், உதவி ஆணையர் தேவேந்திரன், உதவி பொறியாளர் விஜய் கொண்ட குழுவினர் சில நாட்களுக்கு முன் சடையன்குப்பம், பர்மா நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அரசுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதும் அதில் ஒரு பகுதியை லேஅவுட்களாக மாற்றி பிரித்து விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தனியாரிடம் இருந்த அரசு நிலத்தை மீட்டு, ‘’ இது அரசுக்கு சொந்தமான இடம், இந்தஇடத்தில் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 3 இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனிடையே, நேற்றுமுன்தினம் 3 அறிவிப்பு பலகையில் ஒரு பலகையை எடுத்துச்சென்றுவிட்டனர். ‘’அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து சடையன்குப்பம், பர்மா நகர் பகுதியில் அரசு நிலத்தை கண்டறிந்து அனைத்தும் மீட்கப்படும்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசின் எச்சரிக்கை பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது சாத்தாங்காடு போலீசில் உதவி பொறியாளர் விஜய் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.

Advertisement