தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை வெள்ளலூர் பஸ் நிலையத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு ஆண் கொலை

Advertisement

*அழுகிய நிலையில் உடலை மீட்டு போலீஸ் விசாரணை

கோவை : கோவை வெள்ளலூர் பஸ் நிலையத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் கொலை செய்யப்பட்டார். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வந்தது. பின்னர், அந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது குடிப்பதும், பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காலை நேரங்களில் பஸ் நிலையம் பகுதியில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பொதுமக்கள் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது கடுமையான துர்நாற்றம் வீசி உள்ளது. இதையடுத்து நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த ஒரு சிலர் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என தேடி பார்த்தனர். அப்போது, பஸ் நிலைய கட்டிடத்தின் மறைவான பகுதியில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மேலும், மோப்ப நாயையும் வரவழைத்தனர். தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலை செய்யப்பட்ட ஆணின் சடலம் அருகே இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதையடுத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ஆண் யார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? அவர் கொலை செய்யப்பட்டு பஸ் நிலையம் பகுதியில் தூக்கி வீசி சென்றார்களா? அல்லது பஸ் நிலையம் பகுதிக்கு அழைத்து வந்து கை, கால்களை கட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு நேரில் வந்து துணை கமிஷனர் உதயகுமார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தனிப்படை அமைத்து கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை கண்டறிந்து, கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

எப்போது நடந்தது?

கொலை குறித்து போலீசார் கூறுகையில்,“கொலை செய்யப்பட்டவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இதனால், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த ஒரு வாரத்தில் பதிவான கட்சிகளை கைப்பற்றி வருகிறோம். மேலும், கொலை செய்யப்பட்டவரின் உடலில் பலத்த காயங்கள் உள்ளன.

ஆனால், உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் எது போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும். அதேபோல், அந்த பகுதியில் அதிக நாய்கள் இருப்பதால் நாய்களும் உடலை கடித்து குதறி இருக்கும். அதனாலும் உடலில் அதிகளவில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

Advertisement