தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை

*கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Advertisement

தர்மபுரி : பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான பரிசு திட்டங்களை அறிவித்து, 800க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.30 கோடி வரை வசூல் செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பணம் கட்டி டெபாசிட் தொகை முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும், ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கும் பணத்தை தராமல் அலைகழித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னர் நிதி நிறுவன உரிமையாளர், நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவானார்.

இதனால், பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement