தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் 14 ஆண்டுகளாக காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாக மையம் கடந்த 14 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனை, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்கு, கடந்த 14 ஆண்டுக்கு முன் கிராம பெண்கள் பயன்படுத்துவதற்காக குழிப்பாந்தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், வளவந்தாங்கல் செல்லும் சாலையையொட்டி ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்து 14 ஆண்டுகளை கடந்தும், பயன்படுத்த முடியாதபடி பூட்டியே கிடக்கிறது. அப்பகுதி, பெண்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று, சுகாதாரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு தற்போது, கட்டிடம் பயன்படாமல் கிடப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாதது போல் இருப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இன்னும் அந்த சுகாதார வளாகத்துக்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. மின் இணைப்பு கொடுத்தவுடன் இந்த சுகாதார வளாகம் திறக்கப்படும் என்றனர். எனவே, உடனடியாக மின் இணைப்பு பெற்று கட்டி முடிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சுகாதார வளாகத்தை விரைவில் பெண்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Related News