தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் ஆய்வு

 

Advertisement

சென்னை: மாமல்லபுரம் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ரூ.1 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த, கல்லூரியில் கட்டிடக்கலை, சுதைச் சிற்பம், கற்ச் சிற்பம், மரச்சிற்பம், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 4 ஆண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் புனரமைக்கும் பணி, மேலும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் செய்த 10 தலை ராவணன் சிலை, கற்சிற்பம், மரச்சிற்பம் உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சுற்றுலா கலாச்சாரம் மற்றும் அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிதா ராமு, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன், கல்லூரி (பொ) முதல்வர் ராமன், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் விசுவநாதன், திமுக கவுன்சிலர் மோகன் குமார், வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement