தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறைகேடுகளில் ஈடுபடும் பி.எட். கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். வகுப்புகளில் வெளிமாநிலத்தில் இயங்கும் குளோபல் அகாடமி போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக நேரடியாக தேர்வு எழுத அனுமதிப்பதாக (வகுப்புகளுக்கு வராமல் சேர்க்கை செய்து) பல்கலைக்கழக மானியக்குழுவில் இருந்து புகார் மனு பெறப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக கேரளமாநில போலீசில் அந்த அகடாமி மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கல்லூரி முதல்வர்கள், செயலாளர்கள் இதுபோன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக் கூடாது. இதுபோல் தவறான முறையில் மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Advertisement

Advertisement