தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு பெண்ணுக்காக 2 ஆண் யானைகள் 5 மணி நேரம் சண்டை: பரிதாபமாக பலியான சோகம்

Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் தற்போது யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக கூட்டமாக அடிவாரத்திற்கு வரும் யானைகள் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மருதடி பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜூக்கு நேற்று தகவல் கிடைத்தது.

வனத்துறையினர் சென்று பார்த்தபோது மரங்கள், செடிகள், கொடிகள் சாய்ந்து போர்க்களம் போல் காட்சியளித்தது. ஆண் யானை ஒன்றும் இறந்து கிடந்தது. மதுரையில் இருந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், ‘‘பெண் யானைக்காக 2 காட்டு ஆண் யானைகள் கடுமையாக சண்டை போட்டுள்ளன.

சுமார் 5 மணி நேரம் வரை இந்த சண்டை நடந்திருக்கலாம். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சண்டை நடந்ததற்கான தடயங்கள் உள்ளன. இதில் 50 வயது ஆண் யானை படுகாயம் அடைந்து இறந்திருக்கிறது. யானைகள் சண்டை நடைபெற்ற போது காட்டுக்குள் நீண்ட நேரம் பயங்கரமாக பிளிறல் சத்தம் கேட்டதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்’’ என தெரிவித்தனர்.

Advertisement

Related News