தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த ஆண் யானை 2 நாள் சிகிச்சைக்குப்பின் குணமானது

மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த ஆண் யானைக்கு வனத்துறையினர் உரிய நேரத்தில் 2 நாள் சிகிச்சை அளித்ததால் குணமானது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்பு காட்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று சோர்வுடன் நிற்பதாக வனச்சரகர் மனோஜ் குமாருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையில் சென்ற வனத்துறையினர் புதர் பகுதியில் நின்றிருந்த யானையை கண்காணித்தபோது உடலில் எங்கும் காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

Advertisement

அந்த யானை அவ்வப்போது அருகில் கிடைக்கும் தீவனம் மற்றும் ஓடை நீரை பருகுவதுமாக இருந்தது. ஆனால் வேறு இடத்திற்கு நகராமல் சோர்வுடன் நின்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து இது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி யானையின் உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் வனக்கால்நடை மருத்துவ குழுவினருடன் இணைந்து முதற்கட்ட சிகிச்சையாக யானைக்கு தர்பூசணி மற்றும் வாழைப்பழம் மூலமாக ஆன்ட்டி பயாட்டிக் மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் கொடுத்து வந்தனர்.

கடந்த 2 நாட்களாக அளித்த சிகிச்சையால் யானையின் உடல் நலம் தேறியது. இதையடுத்து இன்று அதிகாலை அருகில் இருந்த வாழை தோட்டத்திற்கு சென்ற யானை வாழைப்பயிர்களை முறித்து உண்டது. இது குறித்த வீடியோவை இன்று வெளியிட்ட வனத்துறையினர், யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக நடந்து சென்று உணவு உட்கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News