தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை அருகே மின் கம்பத்தை சாய்த்தபோது மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

 

Advertisement

தொண்டாமுத்தூர்: கோவை அருகே மின்கம்பத்தை சாய்த்ததில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை பலியானது. கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மலையடிவார கிராமங்களான தாளியூர், கெம்பனூர், குப்பேபாளையம், வீராலியூர், நரசீபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வனத்தில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர்.

இதில், நேற்றிரவு விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய பயிர்களை சாப்பிட்டுள்ளது. இன்று அதிகாலை அங்கிருந்து வெளியேறும்போது தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தை சாய்த்துள்ளது. இதில் மின் கம்பம் கீழே விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானது. இறந்த ஆண் யானைக்கு சுமார் 25 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த வாரம் இதே பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த ‘ரோலக்ஸ்’ யானையை வனத்துறையினர் 4 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News