தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மலேசிய இணையை வீழ்த்தி திரீசா-காயத்ரி வெற்றி: பிடபிள்யூஎப் பைனல்ஸ் பேட்மின்டன்

ஹாங்சோ: பிடபிள்யுஎப் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியா இணையை இந்திய வீராங்கனைகள் வென்றனர். பேட்மின்டன் உலகத் தர வரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் முன்னணி வீரர்களுக்கு இடையில் ‘பிடபிள்யூஎப் பைனல்ஸ்’ போட்டி ஆண்டு இறுதியில் நடைபெறும். இந்த ஆண்டுக்கான போட்டி சீனாவின் ஹாங்சோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஒற்றையர், இரட்டையர் ஆண்கள், பெண்கள் பிரிவுகள், கலப்பு இரட்டையர் பிரிவு என மொத்தம் 5 பிரிவுகளில் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இவற்றில் இந்தியாவுக்கு பெண்கள் இரட்டையர் பிரிவில் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளது. ஏ பிரிவில் களம் காணும் இந்தியாவின் திரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை முதல் சுற்றில் நேற்று முன்தினம் சீன இணையிடம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நேற்று நடந்த 2வது சுற்றில் மலேசியாவின் டினா முரளிதரன்-டன் பியர்லி இணையை எதிர்கொண்டது. இரண்டு இணைகளும் வெற்றிக்காக கடுமையாக போராடியதால் புள்ளிகள் குவிப்பதில் தாமதமானது.

எனினும் முதல் சுற்றை இந்திய இணை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது. தொடர்ந்து நடந்த 2வது சுற்றில் மலேசிய இணை ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. இருப்பினும் சமாளித்து விளையாடிய இந்திய இணை அதையும் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தியது. அதனால் 46நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் இந்திய இணை, 2வது சுற்றில் 2-0 என நேர் செட்களில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் இன்று நடைபெறும் 3வது சுற்றில் ஜப்பான் இணையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவை போலவே ஒரு சுற்றில் மட்டும் ஜப்பான் வென்றுள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் இணை அரையிறுதிக்கு கட்டாயம் முன்னேறும். ஏ பிரிவில் சீனா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மலேசியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.