தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 கோடி இழப்பீடு வழங்க சீன நீதிமன்றம் உத்தரவு!!

பெய்ஜிங் : மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 கோடி இழப்பீடு வழங்க சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 ரகத்தை சேர்ந்த MH370 விமானம், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, நள்ளிரவு 12.41 மணிக்கு 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்டது. சரியாக நள்ளிரவு 1.19 மணியளவில் 'குட்நைட் மலேசியன் 370' என்று விமானி பேசியிருக்கிறார். அதுதான் விமானத்திலிருந்து வந்த கடைசி தகவல். தெளிவான வானிலை, தொழில்நுட்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு என அனைத்தும் இருந்தபோதிலும் சில மணி நேரங்களில் விமானம் திடீரென காணாமல் போய்விட்டது.

Advertisement

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இன்று வரை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பெய்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3½ கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News