தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் கம்பீரமாக நிற்கும் நீர்த்தேக்க தொட்டி

Advertisement

*மக்களுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் கம்பீரமாக உள்ள நீர்த்தேக்க கட்டிடத்தின் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது.

இந்த தொட்டிக்கு அருகாமையில் கிணறு ஒன்று அமைந்துள்ளது.இந்த கிணற்றிலிருந்து மூன் மோட்டார் மூலம் நீரை மேலே ஏற்றி இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட நீர் தேக்கத் தொட்டியில் தேக்கி திருச்சியிலிருந்து விழுப்புரம் மற்றும் சென்னை நோக்கி செல்லும் நீராவி என்ஜின்களுக்கு நீரை வழங்கி வந்தனர்.

குறுகிய ரயில் பாதையாக இருக்கும்போது நீராவி என்ஜின்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. காலப்போக்கில் குறுகிய ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு டீசல் எஞ்ஜின் மூலம் சில ரயில்களும் அதிக எண்ணிக்கையில் மின்சாரத்தின் மூலமும் இயக்கப்பட்டு வருவதால் நீராவி என்ஜின் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் எடுப்பதற்கு கொள்ளிடத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி தேவையில்லாமல் இருந்தாலும் அந்த தொட்டி நூறாண்டுகளை கடந்தும் வலிமை குன்றாமல் அப்படியே இருந்து வருகிறது. இந்த தொட்டிக்கு தண்ணீரை எடுப்பதற்கு பயன்படும் கிணற்றில் உள்ள தண்ணீர் நன்னீராக இருந்து வருகிறது.

பல பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய போதிலும் இந்த கிணற்றில் உள்ள தண்ணீர் நன்னீராக இருந்து வருகிறது. ரயில்வே துறையால் இந்த கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றில் நன்னீர் இருந்து வருவதால் இதனை எடுத்து குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு வினியோகிக்க முடியும்.இதன் மூலம் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

எனவே இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை வழக்கம் போல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி தேக்கி வைத்து அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement