தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் இன்று மாற்றம்: சென்னை கோட்டம் அறிவிப்பு

Advertisement

ஆவடி: பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில்களின் இயக்கத்தில் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் அல்லது ரத்து செய்யப்படும்.

அந்த வகையில் சென்னை பேசின் பாலம் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (19ம் தேதி) மற்றும் 26ம் தேதிகளில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில குறிப்பிட்ட விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. நேற்று மற்றும் 25ம் தேதிகளில் இந்தூர், தன்பாத்தில் இருந்து கொச்சுவேலி, ஆலப்புழாக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் வழியாக இயங்கும்.

வரும் 21, 28ம் தேதிகளில் ஆலப்புழா கொச்சுவேலியில் இருந்து, தன்பாத், கோர்பா விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் செல்வதற்கு பதிலாக பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை வழியாக இயங்கும். பெரம்பூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இன்று (19ம் தேதி), 26ம் தேதிகளில் பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு மாலை 4.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (வண்டி எண் 22652), திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இன்று (19), 26ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக சென்னை கடற்கரை வந்து சேரும். இன்று (19ம்தேதி), 26ம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் மெயில் அதிவிரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்படும். நாளை (20ம் தேதி) மற்றும் 27ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து, இயக்கப்படும் மைசூரு சதாப்தி விரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில், கோவை விரைவு ரயில் காலதாமதமாக இயங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News