தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பராமரிப்பு பணிகளால் தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானம் மூடல்

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சிறிய புல் மைதானம் பராமரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊட்டிக்கு நாள் தோறும் ஏராமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு செல்கின்றனர்.

குறிப்பாக, கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், ஆண்டு தோறும் கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் ேம மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவை தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபடுவது வழக்கம்.

கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் பூங்கா தயார் செய்யப்பட்டது. புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சி அளித்தது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் ஊட்டியில் நடந்த மலர்கள் காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

கடந்த மாதம் 15ம் தேதி மலர் கண் கட்சி துவங்கி 11 நாட்கள் நடந்தது. மலர் கண்காட்சி துவங்கிய போது ஊட்டியில் மழையும் துவங்கியது. இந்த மழை சுமார் பத்து நாட்களுக்கு மேல் நீடித்தது. இதனால் பூங்கா சேறும் சகதியும் ஆக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிர். அதே சமயம் பூங்கா புல் பைதானமும் மிகவும் சேதம் அடைந்தது.

இந்நிலையில் மழை ஓய்ந்த நிலையில் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணிகளை தோட்டக்கலை துறையினர் துவக்கி உள்ளனர். இதனால், பராமரிப்பு பணிக்காக தற்போது சிறிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது.

இந்த புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய புல் மைதானத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

Related News