தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை: மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பள்ளி மாணவர்களுக்கிடையே மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கல்வி சாராமல் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Advertisement

இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த விசாரணை குழு கடந்த வெள்ளிக்கிழமை அசோக்நகர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டது. அப்போது சொற்பொழிவு நிகழ்த்தப்பட்ட நாள் அன்று பள்ளியில் என்ன நடந்தது. இவர்களை யார் அழைத்தார்கள். எஸ்என்சி மூலமாக நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதனை எஸ்என்சி உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி சார்ந்த அனைவரும் இதனை எழுத்து பூர்வமாக பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்தனர். ஆசிரியர்களின் எழுத்துப்பூர்வ கடிதத்தின் அடிப்படையில் அதனை பதிவு செய்து, ஆராய்ந்து, தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் 2வது முறையாகவும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News