தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கி மராட்டிய அரசு புதிய அரசாணை வெளியிட்டதால் சர்ச்சை

Advertisement

மும்பை: 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்கி மீண்டும் புதிய அரசாணையை மராட்டிய அரசு வெளியிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் மராட்டிய மொழிகளில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் இந்தி 3-வது மொழி என மராட்டிய அரசு ஆணையிட்டது. 3ம் மொழியாக எந்த மொழியும் கற்கலாம் என கூறி வந்த மராட்டிய அரசு இந்தியை கட்டாயமாக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வகுப்பு ஒன்றுக்கு 20 மாணவர்களுக்கு மேல் வேறு மொழியை கற்க விரும்பினால் மட்டுமே இந்தியை தவிர்க்க முடியும்.

3ம் மொழியாக இந்தி படிக்க வேண்டும் என மராட்டிய அரசு புதிய அரசாணை வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இந்தி கட்டாயம் என வெளியிட்ட அரசாணையை பெரும் எதிர்ப்பால் திரும்ப பெற்றது மராட்டியம். இந்தி பேசாத மாணவர்கள் மீது மராட்டிய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கடந்த ஏப்ரலில் வெளியான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. ஒரு மாத இடைவெளிக்கு பின் இந்தி கட்டாயம் என அரசாணை வெளியிட்டுள்ளதால் பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பள்ளிகளில் பின்வாசல் வழியாக இந்தியை திணிக்க முயற்சி என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டாய பாடமாக இந்தி கற்பிக்கும் பள்ளிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Advertisement