தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

தானே: மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 1.40 மணியளவில் பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிலாளிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தீயணைப்புபடை மற்றும் பேரிடர் மேலாண்மை படையினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 43 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தின் போது ஏற்பட்ட தீ அருகிலுள்ள மேலும் 3 தொழிற்சாலைகளுக்கு பரவியது. இதன் காரணமாக, தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கரும்புகை சூழ்ந்தது.

Advertisement

Related News