தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மோதல் விவகாரம்; நான் ஒரு போராளி; புகார் அளிக்கும் நபர் அல்ல: ஏக்நாத் ஷிண்டே பகீர் பேட்டி

Advertisement

மும்பை: மாநில பாஜக தலைவர்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தான் புகார் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியிடையே சமீப காலமாகத் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வந்தன. குறிப்பாக கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் சிவசேனா நிர்வாகிகளை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகத் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் பேசி, இனி இரு கட்சிகளும் பரஸ்பரம் நிர்வாகிகளை இணைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ‘அடிவாங்கிய சிறுபிள்ளை போல அழுதுகொண்டு ஷிண்டே டெல்லிக்கு ஓடுகிறார்’ என உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில், தனது டெல்லி பயணம் மற்றும் உட்கட்சி பூசல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் டெல்லிக்குச் சென்று புகார் அளிக்கும் நபர் அல்ல; நான் ஒரு போராளி. மாநிலத் தலைவர்கள் மீதான அதிருப்தியை டெல்லியில் முறையிட்டதாகக் கூறுவது தவறானது.

அனைத்தும் ஊடகங்கள் உருவாக்கிய கற்பனையே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ‘கூட்டணிக்குள் எழும் சிறு பிரச்னைகளை நாங்கள் மாநில அளவிலேயே பேசித் தீர்த்துக்கொள்வோம். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கும், புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுமே டெல்லி சென்றேன்’ என்று அவர் கூறினார். இருப்பினும், பாஜகவின் தீவிர கட்சிப் பணிகள் குறித்து அவர் அமித் ஷாவிடம் கவலை தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Related News