தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர் கதி என்ன?

Advertisement

புனே: புனே மாவட்டம் குண்ட்மாலா கிராமத்தில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்து, 4 பேர் இறந்தனர். 38 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 20 பேர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிராவில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள குண்ட்மாலா கிராமத்தின் வழியே பாய்ந்தோடும் இந்திரயானி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரும்பு பாலத்தின் மீது நேற்று மாலை 4 மணியளவில் சுற்றுலா பயணிகள் பலர் நின்றிருந்தனர்.

அப்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் 4 பேரை சடலமாக மீட்டனர். 32 பேர் காயங்களுடன் தப்பினர். மேலும் சுமார் 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதனிடையே, இந்திராயானி ஆற்றுப்பாலம் பாலம் துருப்பிடித்து சேதம் அடைந்திருந்ததாலும், அதன் மீது அதிக மக்கள் கூடியதாலும் இடிந்து விழுந்திருக்கலாம் என மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

Advertisement