தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா அமைச்சர் வாங்கினார் இந்தியாவில் முதல் டெஸ்லா கார் விற்பனை

 

Advertisement

மும்பை: மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட பிகேசி டெஸ்லா ஷோரூமில் இருந்து இந்தியாவின் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.

அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் கடந்த ஜூலை மாதம் திறந்தது. இந்த ஷோரூம் திறக்கப்பட்ட உடனே போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக், டெஸ்லா ஒய் மாடல் காரை வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மும்பை பிகேசி ஷோரூமில் இருந்து முதல் டெஸ்லா கார், அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கு டெலிவரி செய்யப்பட்டது. காரை வாங்கிய சர்நாயக் கூறியதாவது: பசுமை இயக்கம் குறித்த முதல்கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, எனது பேரனுக்கு இந்த காரை பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன். மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக டெஸ்லா காரை வாங்கினேன்.

குழந்தைகள் இந்த கார்களை பார்த்து, நிலையான போக்குவரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய எலக்ட்ரிக் வாகன புரட்சியை ஏற்படுத்துவதற்கான இலக்கை மகாராஷ்டிரா நிர்ணயித்துள்ளது என்றார்.

 

Advertisement

Related News