தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் பரபரப்பு; பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அஜித்பவார் கடும் மிரட்டல்: வீடியோ வைரல்

 

Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை செல்போனில் அழைத்து துணை முதல்வர் அஜித்பவார் மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் சாலை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் கிராவல் மண்ணை சட்டவிரோதமாக அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்த உள்ளூர் அதிகாரிகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

தாசில்தாரர் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஐபிஎஸ் அதிகாரி அஞ்சலி கிருஷ்ணா, அவர்களை தடுத்து நிறுத்தினார். உடனே துணை முதல்வர் அஜித்பவார், தனது கட்சிக்காரர் ஒருவரது செல்போனில் இருந்து அஞ்சலியை தொடர்பு கொண்டார். நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் தங்களது குரலை அடையாளம் காண முடியவில்லை என அஞ்சலி தெரிவித்தார்.

‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது, ஆனால் நான் துணை முதல்வருடன் பேசுகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. தயவுசெய்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு போன் செய்ய முடியுமா?’ என கேட்டார். இதைக் கேட்டு கோபமடைந்த அஜித்பவார், ‘நான் வீடியோ கால் செய்தால் என் முகத்தை அடையாளம் காண முடியுமா?’ என்று ஆக்ரோஷமாக பேசினார். பின்னர் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து, மண் அள்ளுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

‘நீங்கள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிட்டு உங்கள் அலுவலகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். துணை முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என தாசில்தாரரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் துணை முதல்வர் உத்தரவை மீறியதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என மிரட்டினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் சுஷ்மா அந்தாரே உள்ளிட்ட பலர் அஜித்பவாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement