தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

Advertisement

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றி பா.ஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்தியா கூட்டணியால் மொத்தமாக 46 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2 வாரங்களுக்கு பின்னர், பாஜ தலைவர் பட்நவிஸ் புதிய முதல்வராக கடந்த 5ம் தேதி பதவியேற்றார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டேவும், அஜித்பவாரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற 288 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவையின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் எம்எல்ஏ பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர், சட்டப்பேரவையின் முதல்நாளில் எம்எல்ஏக்களாக பதவியேற்க மறுத்துவிட்டனர்.

Advertisement