தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

கடலூர் : மகாளய அமாவாசையையொட்டி நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.புரட்டாசி, தை, ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

Advertisement

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. வழக்கமாக அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும், மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இதேபோல் கடலூர் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு உள்ளிட்ட பல நீர் நிலை பகுதியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மாகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து நடராஜர் கோயிலுக்கு சென்று நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தனர்.

மேலும் கோயில் வளாக பகுதியில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள், தாயார் மற்றும் பாண்டிய நாயகர் சன்னதி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் தில்லை காளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News