தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியானது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ‘மகா கும்பமேளாவில் பக்தர்கள் பலியானது பற்றி பிரதமர் மோடி ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை?’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மகா கும்பமேளா குறித்த பிரதமர் மோடியின் பேச்சால் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட போது, வெளியில் வந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கும்பமேளா, நம்முடைய வரலாறு மற்றும் கலாசாரம் என்று பிரதமர் கூறுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் எங்களுடைய ஒரே புகார்.
Advertisement

மகா கும்பமேளாவுக்கு சென்ற இளைஞர்கள் பிரதமரிடமிருந்து இன்னொரு விஷயத்தையும் எதிர்பார்க்கிறார்கள், அது வேலைவாய்ப்பு.

அது குறித்தும் பிரதமர் பேசியிருக்க வேண்டும். இது குறித்தெல்லாம் எங்களை பேச அனுமதிக்கவில்லை. ஜனநாயக கட்டமைப்பின்படி, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் அனுமதி தரப்படவில்லை. ஏனென்றால் இதுதான் புதிய இந்தியா. இவ்வாறு கூறினார். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகளும் 2 நிமிடங்களாவது பேச அனுமதித்திருக்க வேண்டும்’’ என்றார்.

Advertisement