தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோ வீலிங் வீடியோ வைரல்: நம்பரை வைத்து நபருக்கு வலைவீச்சு

அண்ணாநகர்: மதுரவாயல் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் வீலிங் செய்த நபரை ஆட்டோ நம்பர் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பைபாஸ் மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் பட்டப்பகலில் அதிகமாக வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக ஒருவர் சாலையில் ஆட்டோவை சாய்த்தபடி சாகசம் செய்துள்ளார். இதை பார்த்ததும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ வேகமாக வைரலானது.

Advertisement

இதையடுத்து போக்குவரத்து உதவி ஆணையர் ரவி, கோபம்பேடு போக்குவரத்துஇன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து இணையதளத்தில் பரவிவரும் வீடியோக்களில் பதிவான ஆட்டோ நம்பரை வைத்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டாண்ட்டில் ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கோயம்பேடு பகுதியில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பைக் ரேஸ் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரவாயல் பைபாஸ், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் ஆட்டோவில் சாகசம் செய்துள்ளனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோவில் சாகசம் செய்யும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News