தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை குயவர்பாளையத்தில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

மதுரை: மதுரை குயவர்பாளையத்தில் சாலையில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மதுரை முனிச்சாலையிலிருந்து கீழவாசலுக்கு செல்லும் முக்கிய சாலையாக குயவர்பாளையம் சாலை இருக்கிறது. இப்பகுதியின் பாதாளச்சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீர் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இந்தப் பகுதியில் பல்வேறு உணவகங்கள், மளிகை, காய்கறிக்கடைகள் உள்ளன. சாலையில் கழிவுநீருடன், அருகில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் இருந்து வரும் கழிவுநீரும் தேங்கிக் கிடக்கிறது.

Advertisement

இது குறித்து குடியிருப்போர் சங்கத்தினர் கூறுகையில், ‘மதுரையின் மிக முக்கிய குயவர்பாளையம் சாலையில் முழுக்க கழிவுநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புவாசிகள் மட்டுமல்லாமல், இப்பகுதியைக் கடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்படுகின்றனர். அருகாமையில் பெண்கள், ஆண்கள் பள்ளிகளுடன், நர்சிங் பயிற்சி மையம், மருத்துவமனை ஆகியவை உள்ளன. சாலையில் கழிவுநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News