மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழா
Advertisement
கண்மாய் கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் குடும்பமாக கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலையால் கச்சா, ஊத்தாவால் மீன்களை பிடித்தனர். கெளுத்தி, கெண்டை, கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 3 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டது. பிடிபட்ட மீன்களை விற்பனை செய்யாமல் வீடுகளில் சமைத்து, இறைவனுக்கு படைத்து, உண்ணுவதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சமத்துவ மீன்பிடி திருவிழா மூலம் விவசாயம் செழித்து, மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Advertisement