மதுரை வக்கீல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை கண்டித்து வழக்கறிஞர்கள் விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆவின் கேட் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. என்.எஸ்.சி. போஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement