தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவிலில் 24-ந்தேதி ஆடி அமாவாசை விழா

Advertisement

மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவிலில் வருகிற 24-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அழகர் மலை உச்சியில் உள்ள வற்றாத நீரூற்றான நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்து வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசையில் தீர்த்தமாடினால் அத்தனை பாக்கியமும் தேடி வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெறும். இதற்காக நூபுரகங்கை தீர்த்த தொட்டி அடிவாரத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக மரத்தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதுதவிர அன்று இரவு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலில் சந்தனம் சாத்துப்படியும், பின்னர் கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

Advertisement