தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மருத்துவமனை மேற்கூரை இடிந்து விபத்து : கட்டிடம் சீரமைக்கப்படுமா? புதிதாக அமைக்கப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!!

மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று புற நோயாளிகள் பிரிவு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கணினி மற்றும் கருவிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக புறநோயாளிகள் காயம் அடைவது தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் வெளியாகின.
Advertisement

இதன் அடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிட மேற்கூரை இடிந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மருத்துவமனை மேற்கூரை இடிந்து விவகாரத்தில் என்ன நடந்தது? அதன் பரப்பளவு என்ன? கட்டடம் கட்டப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது?. மீட்பு நடவடிக்கை என்ன?. கட்டிடம் சீரமைக்கப்படுமா? அல்லது இடித்து புதிதாக அமைக்கப்படுமா?. வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது,"இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement

Related News