தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் பல ேகாடி முறைகேடு விவகாரம் குறித்து மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து, சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், ‘‘ரூ.200 கோடி ஊழல் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்து வரியில் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலில் மாநகராட்சி மேயரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. எனவே, அதன் உண்மை தன்மையை அறியும் விதமாக, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்பதா? இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை விரிவாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட முடியாது’’ என்று திட்டவட்டமாக கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement