தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும்... : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!!

Advertisement

மதுரை : வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி அதிமுக கவுன்சிலர் ரவி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "வரிவிதிப்பில் நடந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது. முறைகேடு தொடர்பாக மண்டலத் தலைவர் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

எனவே இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும். அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை, ஏற்கனவே சிபிஐயிடம் அதிக வழக்குகள் உள்ளன. தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அதனை கண்காணிக்கும். அத்துடன் வழக்கு தொடர்பாக அரசு தரப்பில், ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்''இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement