தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி தொடர் மழையால் நிரம்பி வரும் நீர் நிலைகள்

மதுரை : மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால், அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. தற்போது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
Advertisement

இதன் காரணமாக அனைத்து பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, பல கண்மாய்களில் மறுகால் பாய்கிறது. மேலும் கண்மாய்களில் ஏராளமானோர் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். மேலும் வைகை ஆற்றில் கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் விவசாயப்பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்தை சீர்குலைத்து வருகிறது. இதன்படி அவனியாபுரம் அருகே பெருங்குடியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை பராமரிப்பின்றி உள்ளது. இச்சாலையில் மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசிப்போர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News